Sunday, May 10, 2026
Saturday, September 27, 2025
ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி
ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி ॥ த்⁴யானம் ॥ த்ரினயனாம் மாணிக்யமௌலிஸ்பு²ரத் அருணாம் கருணாதரங்கி³தாக்ஷீம் த்⁴ருதபாஶாங்குஶபுஷ்பபா³ணசாபாம் । த்⁴யாயேத் பத்³மாஸனஸ்தா²ம் விகஸிதவத³னாம் பத்³மபத்ராயதாக்ஷீம்
ஸகுங்குமவிலேபனாமலிகசும்பி³கஸ்தூரிகாம் ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரனாமாவலீ ॥
ஓம் நிரபாயாயை நம: । ஓம் நிரத்யயாயை நம: ।ஓம் து³ர்லபா⁴யை நம: । ஓம் து³ர்க³மாயை நம: । ஓம் து³ர்கா³யை நம: । 19௦ ஓம் து³:க²ஹன்த்ர்யை நம: ।
|
Tuesday, November 5, 2019
சிவனுக்கு உரிய அபிஷேகம் மற்றும் பலன்கள்
Sunday, October 20, 2019
ஜாலியன் வாலாபாக் படுகொலை மாவீரன்
உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.
காரணமாக அமைந்தது.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.
Friday, September 27, 2019
நாளைய மஹாளய அமாவாஸ்யை சிறப்பு
நாளை மகாளய அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற மறக்காமல் இதை செய்யுங்கள்..!!
நாளை மகாளய அமாவாசை... முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம்..!!

🌚ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை திதியின்போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.
🌚பொதுவாக, பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம் அமாவாசை. முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
🌚அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசிப்பெற்று, நமது பாவங்கள் அனைத்தும் விலகும்.
🌚அதிலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பு பெற்ற தினங்களாகும்.
🌚இவற்றில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மட்டும் 'மகாளய அமாவாசை" என்று அழைக்கப்படுகிறது.
🌚இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளை புரட்டாசி மாதம் 11ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் கூடிய நாளில் மகாளய அமாவாசை தொடங்குகிறது.
🌚மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவறவிட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், இது அதற்கான முழுப்பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வருவதாக ஐதீகம்.
🌚மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
🌚இந்த மகாளய அமாவாசையில் பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்கள். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது. தோஷங்கள் இருந்தாலும் அகலும். முக்கியமாக இந்த மகாளய அமாவாசையில் தானம் செய்வது சிறப்பான பலன்களை தரும்.
எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
🌚அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்
🌚தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
🌚தீபம் - கண்பார்வை தெளிவடையும்
🌚அரிசி - நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும்
🌚நெய் - தீராத நோய்களை போக்கும்
🌚பால் - துன்பங்கள் நீங்கும்
🌚பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
🌚தேங்காய் - நினைத்த காரியம் ஈடேறும்
🌚நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
🌚பூமி தானம் - ஸ்வர தரிசனம் உண்டாகும்
🌚அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.
தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :
🌚உடல் மற்றும் மனம் சம்மந்தமான வியாதிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.
🌚மனதில் அமைதியை கொண்டு வரும்.
🌚பித்ரு தோஷம் விலகும்
Sunday, September 1, 2019
மெகாலே பள்ளி கல்விமுறையால் அழிந்து போகும் நமது பாரதீய கலைகள் அறுபத்து நான்கு
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
*ஆய கலைகள் அறுபத்து நான்கும் இவைதான்......*
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) ;
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
Saturday, August 31, 2019
பிள்ளையார் சதுர்த்தி
“#பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் !!!
(பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான்-கதை கீழே)
#விநாயகமூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால் தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், #ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் #தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது.
இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் #குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்” என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, ‘#வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்’ என்று தெரிந்தது.அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே #அமிருத்ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.
பிள்ளையாருக்கு எதிரே நின்று #தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக் கொண்டு விட்டாராம். #பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக் கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். #விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்
.”தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “#கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான #குழந்தைத்தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக !!!
top posts
-
On 09/08/19.... #வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள் #மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள். 1- சின்ன வாழைக்கன்று இரண்டு 2- தோரணம் (கிட...
-
*திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போ...
-
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன...
-
ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி ॥ த்⁴யானம் ॥ ஸின்தூ³ராருணவிக்³ரஹாம் த்ரினயனாம் மாணிக்யமௌலிஸ்பு²ரத் தாரானாயகஶேக²ராம் ஸ்மிதமுகீ²மாபீனவக்ஷோருஹாம் । ப...
-
ஆஷிபா கொலையின் பின்னணி என்ன? ஜம்மு காஷ்மீர் அரசின் வருவாய் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி சட்டமன...
-
“#பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் !!! (பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோம...
-
The Health Ministry banned 344 fixed drug combinations through a gazette notification issued over the weekend. These include several c...
-
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன ச...
-
அரசை வ.காளி முத்து நாடார் கூறுவதை கேட்போமா? உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் கூறுங்கள். உண்மை என்ன என்று அறிந்து கொள்வ...
-
திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து... பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார்...


